மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், பர்மா காலனி சிவன் கோயில், கணபதி நகர் நாகாத்தம்மன் கோயில், திருவள்ளுவர் நகர் குறுக்கு சாலை ஆகிய முக்கிய இடங்களில் 90- வாட்ஸ் தெருவிளக்கு அமைக்கும் பணியையும், காவேரி நகர்,பிளோமினால் புரம், ஆகிய முக்கிய இடங்களில் வழியே செல்லும் பிரதான சாக்கடையை தூர்வாரி சுத்தம் செய்தல் பணியையும், தெற்கு காட்டூர் முருகன் கோயில் அருகில் உள்ள தண்ணீர் டேங்க் அருகில் உள்ள இடங்களை சுத்தம் செய்தல் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.