போதை பொருட்களுக்கு எதிரான மனித சங்கிலி

0 290
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி அலுவலக முன்புற சாலையில் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மனிதச் சங்கிலி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியும் , முழக்கங்களை எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த மனிதச் சங்கிலியில், மாநகர காவல் ஆணையர் க. கார்த்திகேயன், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர். வைத்திநாதன்,
பல்வேறு கல்லூரிகளின் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.