திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் 75 வகையான பழ மரக்கன்றுகள் நடும் பணி : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருச்சி மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் சுதந்திர தினத்தையொட்டி புதிதாக உருவாக்கப்பட்ட பழ மரப்பூங்காவில் 75 வகையான பழ மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் இன்று தொடங்கி வைத்து ஒவ்வொரு பழ மரக்கன்று வளர்ப்பிற்கும் ஒவ்வொரு துறையின் அலுவலர்களை பொறுப்பாளர்களாக நியமித்து பழ மரக்கன்றுகளை வளர்த்திட அறிவுறுத்தினார்.