ஸ்ரீரங்கம் கோவிலில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி தொடக்கம்
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் : இன்று 24.08.2022 திருக்கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் திரு இரா.ஹரிஹரசுப்பிரமணியன் ,கோயில் மேலாளர் திருமதி கு.தமிழ்செல்வி ஆகியோர் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகளை திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பக்தர்களின் காணிக்கைகளை கணக்கிட்டு வருகின்றனர்.