பொன்முத்துநகரில் வாரச் சந்தை தொடக்கம்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழிகாட்டுதல் படியும், மாநகர செயலாளரும் கோட்டத் தலைவருமான மு.மதிவாணன் அறிவுறுத்தல் படியும் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தனது வார்டுக்குட்பட்ட பொன்முத்து நகர் பகுதியில் காய்கறிகள்,பழங்கள் விற்பனை வார சந்தையை பூஜை போட்டு தனது மனைவி சத்யாசெந்தில் மகன்கள் நித்திஷ்வரன், சர்வேஸ்வரன், ஆகியோருடன் துவக்கி வைத்தார், இந்நிகழ்வில் வார சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, வெற்றிவேல்,குரு, மற்றும் வார சந்தை குழுவினர்கள் சிவசக்தி கார்த்திக் உடன் கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.