திருச்சி – கரூர் சாலையில் காய்ந்த நிலையிலுள்ள மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை
திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு ஆலோசனை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கையில்
திருச்சி கரூர் சாலையில் அந்தநல்லுர் அருகே உள்ள புளிய மரங்களில் பெரிய காய்ந்த மரக் கிளைகள் இரண்டு மரங்களில் சாலையில் மேல் பகுதியில் விழுந்து விழும் நிலையில் உள்ளது.தற்போது நிலவும் மழைக்காலத்தில் சாலையில் விழுந்து ஏதேனும் விபத்து ஏற்பட்டு சாலை பயனீட்டாளர்கள் பாதிப்பு ஏற்படும் முன்னர் காய்ந்த மரக் கிளைகளை அகற்றி சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்த வேண்டுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
