அளுந்தூரில் புதிதாக அமைக்கப்பட்ட உயர் திறன் மின்மாற்றி – காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியில் மூலம் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அளுந்தூர் துணை மின்நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உயர் திறன் மாற்றியின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார். இதனையொட்டி திருச்சி அளுந்தூர் துணைமின்நிலையத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, தமிழ்நாடு மின்உற்பத்திக் கழக மேற்பார்வையாளர் பொறியாளர் பிரகாசம், செயற்பொறியாளர்கள் முத்துராமன், சிவலிங்கம், மணிகண்டம் ஒன்றிய குழுத் தலைவர் கமலம் கருப்பையா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்நாடு மின் உற்பத்திக்கழக அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.