பிரபல கஞ்சா வியாபாரி மதன் கைது
மத்திய மண்டல காவல்துறை தலைவர், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், ஆகியோரின் உத்தரவுக்கிணங்க, தனிப்படையினர் அமைக்கப்பட்டு
ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் 8 கஞ்சா வழக்குகளில் தலைமறைவாக இருந்த எதிரி மதன்@ மதுபாலன்(29), பாஸ்கர், ராம்ஜி நகர். என்பவரை ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்ட 21 கிலோ கஞ்சாவுடன் 13.11.2022 தேதி மாலை நாவலூர் குட்டபட்டு அருகிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலை கழக சாலை சந்திப்பு அருகில் வாகன தணிக்கை செய்த போது ராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் வீரமணி உள்ளிட்ட காவல் அலுவலர்களுடன் செய்யபட்டு மேற்படி எதிரி மதனை கைது செய்து, இருசக்கர வாகனம்,21 கிலோ கஞ்சா ஆகியவகைகளை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நடுவர் உத்தரவு படி 18.11.22. தேதிவரை நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.