மக்களை தேடி மருத்துவம் செயல்பாடுகள் : அமைச்சர் மா.சுப்ரமணியன் கேட்டறிந்தார்
திருச்சி, நவ. 25 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அதிகாலை ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டு 14 கிலோ மீட்டர் முடிவடையும் இடத்தில் உள்ள உத்தமர்சீலி கிராமத்தில் க்களை தேடி மருத்துவம் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டு அறிந்தார். மக்களை தேடி மருத்துவம் பயனாளிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களுக்கு வழங்கப்படும் மருத்து பெட்டகத்தை அமைச்சரிடம் காண்பித்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.