மணப்பாறை அருகே அரசு விரைவுப் பேருந்து கவிழ்ந்து விபத்து – 10 பேர் காயம்
சென்னையில் இருந்து 33 பயணிகளுடன் பொள்ளாச்சி நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்து திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த நடுப்பட்டி என்ற இடத்தில் சாலை நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உடுமலைப்பேட்டை காவல்நிலைய சப் – இன்ஸ்பெக்டர் முருகன் உள்பட 10 பேர் படுகாயம். மணப்பாறை
அரசு மற்றும் தனியர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
