பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, ஜன.3 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், காட்டூர் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணியினை நேரில் பார்வையிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்களை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்பையா, வட்ட வழங்கல் அலுவலர் வனஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.