12-ம் வகுப்பு தேர்வு தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி,மார்ச்13 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின. அதன் ஒரு பகுதியாக திருச்சி அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி, சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அன்னால் மேல்நிலைப்பள்ளி, பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளி, ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையங்கள் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.