சிறந்த விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கல்
திருச்சி, ஏப்.3 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் ஒரு ஏக்கரில் அதிகமான பட்டு முட்டை தொகுதிகள் வளர்ப்பு மற்றும் பட்டுக்கூடு அறுவடை செய்த மாவட்ட அளவிலான மூன்று சிறந்த விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கி பாராட்டினார். உடன் பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ரெங்காப்பாப்பா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளனர்.