மேஜர் சரவணன் நினைவு தினம் : அமைச்சர் அன்பில் மகேஸ் மரியாதை
திருச்சி, மே 29 மேஜர் சரவணன் 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி அவர்களது இரண்டு முகாம்களை தனது ஏவுகணைகளால் தாக்கி அவற்றை முழுவதும் அழித்துவிட்டு வீரமரணம் அடைந்தார் திருச்சியைச் சார்ந்த மேஜர் சரவணன் அவரது வீர தீர செயல்களை பாராட்டி இந்திய அரசு பாட்டலிக்கின் கதாநாயகன் என்றும் நம் நாட்டின் உயரிய விருதான வீர சக்கரா என்ற விருதையும் வழங்கி கௌரவித்தது. அவரது 24 ஆம் ஆண்டு நினைவு விழாவை முன்னிட்டு அவரது நினைவகத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்ய மேஜர் சரவணன் அறக்கட்டளை சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்