கடைகள், நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் நல அலுவலர்கள் ஆய்வு
ஜூன் 12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகரம் காந்தி மார்க்கெட் மற்றும் பெரியகடைவீதி பகுதியில் கடை மற்றும் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் உள்ளார்களா குறித்து ஆய்வு 28.06.23 நடைபெற்றது. குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அஜீம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சமூகப்பணியாளர் பிரியதர்ஷினி சென்னை பட்சபன் பட்சோ ஆன்டோலன் நிறுவன மாநில ஒருங்கிணைப்பாளர் நத்தார்சா மாலீம் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் லெட்சுமி, நூருனீசா, ராஜேந்திரன், வெங்கடேசன் பாலசுப்ரமணியன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில் காந்தி மார்க்கெட், பெரியகடைவீதி பகுதிகளில் இருந்து ஆறு குழந்தைகள் மீட்டனர்.
