உப்பிலியபுரம் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

0 349
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 28 திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலிபுரம் அன்பு நகரில் உள்ள விநாயகர் பாலமுருகன் மகா மாரியம்மன் மதுரை வீரன் வேம்படியான் மற்றும் நவ கிரகங்கள் அமைந்துள்ள கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழா அன்று வேம்படியான் சாமி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மகா கணபதி ஹோமம் தீபாராதனை நடைபெற்றது அடுத்து புளியஞ்சோலையிலிருந்து தீர்த்த குடம் காவேரி தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் கோட்டை வீதி வழியாக சுற்றி வந்து கோபுர கலசம் கோபுரத்தின் மேல் ஏற்றுத்ல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று மாலை உப்பிலியபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பச்சைமலை காளியை வழிபாடு செய்து யானை குதிரையுடன் வேத பாராயணத்துடன் கங்கா யமுனா சரஸ்வதி போன்ற நதிகளில் இருந்து புனித தீர்த்தம் மற்றும் சபரிமலை பம்பை தீர்த்தம் கொல்லிமலை புளியஞ்சோலை தீர்த்தம் ஆகியவற்றுடன் முளைப்பாரி எடுத்து மேல வாத்தியத்துடன் கடைவீதி வழியாக திருக்கோயில் வளாகத்தை அடைந்தது. காலை மங்கல இசை திருமுறை பாராயணம் கோபூஜை சூரிய நாராயண பூஜை மகாபூர்ண நாடி சந்தானம் கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்றது . நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.