புதிய நியாயவிலைக்கடை திறப்பு
திருச்சி, செப்.5 திருச்சி மாநகராட்சி பெரிய மிளகு பாறை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நியாயவிலைக்கடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ராஜேந்திரன், நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் உள்ளனர்.