பாதுகாப்பு முகாமில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு
சென்னை, டிச. 5 மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் பெருமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்து வருகிறார்.

வில்லிவாக்கம் பாரதி நகரில் தேங்கியிருக்கும் மழைநீரை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, அதிக மின்திறன் கொண்ட மோட்டார்களைப் பயன்படுத்தி நீரை உடனடியாக வெளியேற்றுமாறு அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக மாமன்ற உறுப்பினர் கூ.பீ.ஜெயின் அவர்களின் அலுவலகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் உணவுக் கூடத்தையும் பார்வையிட்டார்.