முதல்வர் கான்வாய் கடந்து சென்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கரூர், ஜூலை 10 கரூர் மாவட்டம் குளித்தலை காவேரி பாலம் அருகே தமிழக முதல்வர் விஜய் கான்வாய் கடந்து சென்ற போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேலம் ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் மீனா குமாரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அவரை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சக போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.