தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் அனுசரிப்பு
தியாகி இம்மானுவேல் சேகரனின் 64வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை தாங்கி, இம்மானுவேல் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.