மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(27). இவர் சம்பவத்தன்று பாலக்கரையில் உள்ள ஓட்டல் முன் நிறுத்தி இருந்த அவருடைய மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் குற்றப்பிரிவு சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முகமதுதமீம்(34), சுலைமான்(32) ஆகியோர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.