ஸ்ரீரங்கம் கோவிலில் தீ தடுப்பு கருவி பொருத்தப்பட்டு தண்ணீர் அடித்து பரிசோதனை!!
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது அருள்மிகு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகும்.இந்த ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் ஸ்ரீபெருமாள் மூலஸ்தானம் அருகிலும், தன்வந்திரி சன்னதி அருகிலும் மற்றும் கார்த்திகை கோபுர வாசல் ஆகிய மூன்று இடங்களில் தீ தடுப்பு கருவியான “நீர் தும்பி” அமைக்கப்படவுள்ளது.
இதில் முதற் கட்டமாக கார்த்திகை கோபுர வாசலில் நீர் தும்பி கருவி அமைக்கப்பட்டு, கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து , உதவி ஆணையர் கு. கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டு பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.
