தேமுதிக நிர்வாகிகளை போலீஸ் நிலையம் அழைத்து சென்றதால் பரபரப்பு
மணப்பாறையில் தேமுதிக நிர்வாகிகளை வழக்கு ஒன்றில் வாரண்ட் இருப்பதாக கூறி போலீசார் போலீஸ் நிலையத்திற்கு சுமார் 10க்கும் மேற்படவர்களை அழைத்து சென்றனர்.
பின்னர் இதுகுறித்த தகவல் அறிந்த தேமுதிகவினர் உள்ளிட்ட பலரும் திரண்டு போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தியை அடுத்து அழைத்து வரப்பட்ட தேமுதிக நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.