பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திறப்புவிழா முன்னேற்பாடு பணிகள்
திருச்சி, ஏப்.18 திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்து பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மே மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளத்தை முன்னிட்டு விழா அரங்கு அமைப்பதற்கான பூமிபூஜை செய்து முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம், மாவட்ட நகர் ஊரமைப்புக்குழு உறுப்பினர் வைரமணி, மாநகராட்சி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.