துறையூர் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்
திருச்சி, மே 29 கொப்பம்பட்டி 110/33-11KV மற்றும் து.ரெங்கநாதபுரம் 33 / 11KV மற்றும் த.முருங்கப்பட்டி- 33/11KV துணை மின் நிலையங்களில் மே 31 சனிக்கிழமை அன்று பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், B.மேட்டூர், காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம் மருவத்தூர். செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி மற்றும் த.பாதர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு பகுதிகளுக்கு காலை 9:45 மணி முதல் மதியம் 4:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என துறையூர் கோட்டம் செயற்பொறியாளர் பொன்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்