மேஜர் சரவணன் நினைவு நாள்: மாவட்ட ஆட்சியர் மலர்தூவி மரியாதை
திருச்சி, மே 29 மேஜர் சரவணன் 26 ஆவது நினைவு நாளை முன்னிட்டு வெஸ்ட்ரி பள்ளி அருகிலுள்ள மேஜர் சரவணன் சதுக்கத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.