தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் ரவி முத்துராஜா, செயலாளர் பாபு, மாநில துணைத்தலைவர் சிவசக்தி ராமநாதன், மாவட்ட பொருளாளர் கணேசன், ஸ்ரீரங்கம் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ராஜன், கிளை சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.