துவாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

0 174
Stalin trichy visit

திருச்சி, ஆக.20  திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட ராவுத்தான் மேடு சமுதாய கூடத்தில்நடந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது‌. இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 17 வது வார்டு பெல் நகர், இந்திரா நகர், கலைஞர் நகர் ,பரக்கத் நகர், தேசிய தொழில்நுட்பக் கல்லூரி குடியிருப்பு மற்றும் ராவுத்தான் மேடு பகுதி மக்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ராவத்தான் மேடு பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு   நகராட்சி தலைவர் காயம்பூ தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட டி.ஆர்.ஓ ராஜலட்சுமி, திருச்சி மாவட்ட ஆர்.டி.ஓ அருள் நகராட்சி ஆணையர் பட்டுசாமிதிருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைத்து இலவச வீட்டு மனை பட்டா நான்கு பேருக்கு வழங்கினார். மேலும் முகாமில் கலந்து கொண்ட பங்கு பெற்றுள்ள துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார். இது முகாமில் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.