புதிய நூலக கட்டடம் காணொளி காட்சி மூலம் திறப்பு
திருச்சி, செப். 26 சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திருச்சி மாவட்டம், கே.கே.நகர், அய்யப்பத நகரில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள புதிய நூலகக் கட்டடத்தை திறந்து வைத்ததைத் தொடர்ந்து திருச்சி அய்யப்பா நகரில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு பார்வையிட்டார். இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ், மண்டல குழுத் தலைவர் மு.மதிவாணன், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார், 63ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பொற்கொடி, அரசுத்துறை அலுவலர்கள், வாசகர் வட்டத் தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.