திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் சோதனை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சோமரசம்பேட்டை எஸ்.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த முகமதுஇலியாஸ்(42), கோப்பு கீழதெருவை சேர்ந்த மகாமணி(60) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெள்ளை நிறதுண்டு சீட்டு மற்றும் 11 டோக்கன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.