எட்டு மாதங்களுக்கு பிறகு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் – நேரடியாக பெறப்பட்ட மனுக்கள்!

0 394
Stalin trichy visit

எட்டு மாதங்களுக்கு பிறகு மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுக்களை நேரடியாக பெறப்பட்டது.கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக மக்கள் குறைதீர் கூட்டத்தில் நேரடியாக மனுக்கள் பெறும் முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் தங்கள் மனுக்களை ஆட்சியர்‌ அலுவலக வாயிலில் உள்ள புகார் பெட்டியில் போட்டு சென்றனர். இந்த நிலையில் கடந்த தளர்வு அறிவிப்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டமானது நேரடியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு பிறகு திங்கட்கிழமையான இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை மனுக்களாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு அவர்களிடம் வழங்கினர். நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெறும் இந்த குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் வழங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.