மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவிலில் கார்த்திகை மகாதீபம்

0 245
Stalin trichy visit

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோவிலில் கார்த்திகை மகாதீபம்

700-லிட்டர் எண்ணெய், 300- கிலோ பருத்தி துணிஆகியவற்றைக்கொண்டு மகாதீபம்…மகா தீபம் தொடர்ந்து 3 நாட்கள் தொடர்ந்து இரவும் பகலும் எரியும்…மகா தீபம் சரியாக ஆறு மணிக்கு ஏற்றப்பட்டது – ஓம் நமச்சிவாயா என பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

தென்கயிலாயம் என போற்றப்படுவதும், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஸ்வாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் லிங்கவடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுககு சிவபெருமான் தாய்வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த ஸ்தலம் என்பதால் தாயுமானவர் என்றழைக்கப்படுகிறார்.சுமார் 3500-பில்லியன் ஆண்டுகள் பழமையான இம்மலைக்கோட்டையில், இக்கோவிலில் மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் என்றழைக்கப்படும் விநாயகர் கோவிலும், மலை நடுவே தாயுமானவர் மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழே மாணிக்க விநாயகரும் எழுந்தருளி காட்சியளிக்கின்றனர். இக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.இன்று காலை பரணிதீபம் ஏற்றப்பட்ட நிலையில், தாயுமானவர் சன்னதியிலிருந்து மாலை 5.30- மணிக்கு தீபம் ஏற்றப்பட்டு, அங்கிருந்து தீபம் கொண்டு செல்லப்பட்டு, தாயுமானவர், மட்டுவார்குழலமை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி காட்சியளிக்க, கொம்பு வாத்தியங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க ,273 அடி உயரமும், 417 படிகள் கொண்ட மலைக்கோட்டை உச்சிப் தாயுமானவர் சன்னதிபிள்ளையார் கோவில் முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கொப்பரையில் 700 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி 300-மீ அளவுள்ள பருத்தி துணியாலான மெகா திரியிட்டு மகாதீபம் சரியாக மாலை 6 மணிக்கு வான வேடிக்கைகள் முழங்க ஏற்றப்பட்டது. மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள பல்வேறு வீடுகளின் மாடியிலும், மலைக்கோட்டை பகுதி வீதிகளிலும் நின்று திரளான பக்தர்கள், தென்னாடுடைய சிவனே போற்றி என பக்திபரவசத்துடன் முழக்கமிட்டவாறு எம்பெருமானை வழிபாடு செய்து வணங்கிச்சென்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறநிலையத்துறையினர், மற்றும் நிர்வாகத்தினர் மேற்கொண்டிருந்தனர்.மகாதீபம் ஏற்றப்படும் போது சிவாச்சாரியார்கள், உபயதாரர்கள், ஓதுவார்கள், இந்து சமய அறநிலையத் துறையினர், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏற்றபடும் இந்த மகா தீபம் தொடர்ந்து 3 நாட்கள் தொடர்ந்து இரவும் பகலும் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திகை தீப திருநாள் ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மற்றும் செயலாளர்கள் அருள்செல்வன் உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.