திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

0 16
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 29  திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட டர்பன் நீரேற்று நிலையம், ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குடிநீர் உந்து குழாய் குடமுருட்டி அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக பதிக்கப்பட்ட குடிநீர் உந்து குழாயுடன் இணைக்க வேண்டியுள்ளது. இப்பணி இன்று (29.06.2026) மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை, டர்பன் நீரேற்று நிலையம், நீரேற்று நிலையத்திலிருந்து, மலைக்கோட்டை, சிந்தாமணி, ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 30.06.2026 ஒருநாள் இருக்காது.

01.07.2026 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர்  கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.