திருச்சி மாவட்டம், பாலக்கரை இருதயபுரம் பகுதியை சேர்ந்தவர் எட்வர்டு(58). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் கழிவறைக்கு சென்றபோது, தடுமாறி விழுந்து காயம் அடைந்தார்.
அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.