திருச்சி மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021ன் போது பயன்படுத்தாத வாக்குப்பதிவு இயந்திரங்களின், கட்டுப்பாட்டு இயந்திரம் 870ம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் விவிபேட் இயந்திரம் 1090 ஆகியவற்றை உத்தர பிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வைத்திட இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பயன்படுத்தாத வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையானது, மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று திறக்கப்பட்டது.