திருச்சி அரியமங்கலம் அம்மா குளம் பாரதியார் தெரு அருகே தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த அரியமங்கலம் முல்லை நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ்(வயது 33) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.