நெய்வேலி என்எல்சி நிறுவன இரண்டாவது சுரங்கத்தில் தீ விபத்து
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் சர்பேஸ் பெஞ்ச் எனப்படும் பிரிவில் எம் டி சி எனப்படும் நிலக்கரி எடுத்துச் செல்லக்கூடிய கன்வேயர் பெல்ட்டின் இழுவை இயந்திரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது இதில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. எனர்ஜி நிறுவனத்தின் சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் உறைவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது என்று கூறப்படுகிறது மேலும் எனர்ஜி நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற தீ விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பணிபுரியும் தொழிலாளர்களிடையே அச்சமும் ஏற்பட்டுள்ளது