கே.கே.நகர் பகுதியில் நடைபெற்ற தி.மு.க.செயல் வீரர்கள் கூட்டம்
இந்திய ஒன்றியத்தின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் கழகத் தலைவர் அவர்களின் கரத்தை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வலுப்படுத்த வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில், திருச்சி மாநகரம் கலைஞர் நகர் பகுதி கழகத்தின் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் இரயில் விஹார் மினி ஹால், சாத்தனூர் மெயின் ரோடு, கலைஞர் நகர் பகுதியில் . பகுதி கழக செயலாளர் G.மணிவேல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாவட்ட கழக செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் , மாநகர செயலாளர் மு.மதிவாணன் , வண்ணை அரங்கநாதன் . செந்தில் செங்குட்டுவன், .மூக்கன். லீலாவேலு நூர்கான், சந்திரமோகன் பொன் செல்லையா சரோஜினி செந்த மிழ்ச்செல்வன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.