போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மின்கம்பம் மாற்றி அமைப்பு
திருச்சி மாநகர் மாவட்டம் கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட உறையூர் பகுதியில் உள்ள CSI மிஷின் மருத்துவமனை அருகில் சாலையின் வளைவில் உள்ள மின் கம்பம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.
இதனால் பலமுறை விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பலமுறை பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
எனவே இந்து_முன்னணிசார்பாக EB அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
தற்போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு மின்கம்பம் மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது