பொங்கல் திருநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கல்
திருச்சி, ஜன.11 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவுப்படி தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கும், பணியாளர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் சீருடைகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் ஆண்டாள் இராம்குமார் , கோயில் மேலாளர் தமிழ்செல்வி, ஆய்வாளர் மங்கையர் செல்வி ஆகியோர் வழங்கினர் .