போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
திருச்சி, ஆக.11 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கெண்ட நிகழ்வினை காணொளி காட்சி வாயிலாக திருச்சி கேம்பியன் பள்ளியில் மாணவ, மாணவிகள் நேரடியாக பார்வையிட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகர காவல் ஆணையர் காமினி, உதவி ஆணையர் (கலால்) மீனாட்சி, ஆவின் பொதுமேலாளர் முத்துமாரி, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், கேம்பியன் பள்ளி முதல்வர் ஜேம்ஸ்பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.