சிலம்பம் போட்டியில் மாணவ, மாணவிகளை தகுதி இழப்பு செய்ததாக குற்றச்சாட்டு
திருச்சி, செப். 12 அண்ணா விளையாட்டரங்கில், தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான சிலம்பம் போட்டிகள் இன்று நடைபெறவிருந்த நிலையில், எடை குறைவாக இருப்பதாக கூறி மாணவ, மாணவிகளை தகுதி இழப்பு செய்ததாக குற்றச்சாட்டு.
விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மற்றும் அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தை அடுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்ணன் மற்றும் கேகே நகர் போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டு பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 40 கிலோவுக்கு கீழ் இருந்தாலும் அவர்களை விளையாட்டுக்கு அனுமதிக்கலாம் என்று உத்தரப் பிறப்பித்து தொடர்ந்து தற்போது போட்டி துவங்கியிருக்கிறது
திருச்சி மாவட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பள்ளிக்கு மாணவிகள் பங்கேற்கும் போட்டி
தொடு சிலம்பப் போட்டி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது , அறிவிப்பில் எடை குறித்து எந்த ஒரு அறிவிப்பும் சுற்றறிக்கையில் இல்லாததால் இந்த குழப்பம் என கூறப்படுகிறது