மாற்றுக்கட்சியினர் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்
திருச்சி, ஜூன் 25 மாற்றுக்கட்சியினர் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்
திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் 34அ வார்டு பி.ஜே.பி பாலக்கரை பகுதி இளைஞரணி பொது செயலாளர் விக்னேஷ்பாபு அக்கட்சியில் இருந்து விலகி தன்னை திமுக கழகத்தில் இணைத்துக் கொண்டார். அதேபோன்று வார்டு 33 இல் அனைத்திந்திய அண்ணா திமுகவிலிருந்து விலகி சூரிய நாராயணன் தன்னையும் திமுக கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் மாநகரக் கழக செயலாளர் மு. மதிவாணன், வட்டக் கழக செயலாளர்கள் முகேஷ்குமார், கருணாநிதி உடனிருந்தனர்.