நீட் எதிர்ப்பு போராளி அனிதாவின் நினைவு நாள்: திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
திருச்சி, செப்.1 நீட் எதிர்ப்பு போராளி அனிதாவின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க மாணவரணி சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது..
நீட் எதிர்ப்பு போராளி அனிதாவின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு திருச்சி மத்திய மாவட்ட மாணவர் அணி சார்பில் மாநில மாணவரணி துணைச் செயலாளர் பி.எம் ஆனந்த் தலைமையில் அனிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது..
இந்த நிகழ்வில் மாவட்ட துணை அமைப்பாளர் தென்னூர் அப்துல் காதர், மற்றும் இஞ்சூர் சதீஷ், உறையூர் ஜெய், பிரேம், பூலோகநாதன், , அப்பாதுரை,ஆரிப் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்…