திருச்சி பொன்நகர் பகுதியில் அடுத்தடுத்த கடைகளில் திருட்டு முயற்சி
திருச்சி, ஆக.3 திருச்சி பொன்நகர் மெயின் சாலையில் உள்ள 2 -வது மற்றும் 4 -வது வீதிகளில் டீ கடை, ஜெராக்ஸ், ஒட்டல் மற்றும் டிராவல்ஸ் கடை உள்ளது. இதேபோன்று மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை யில் டீக்கடை மற்றும் சூப் கடை உள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல், வியாபாரிகள் கடையை பூட்டி வீட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இதையடுத்து நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் இந்த கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்து உள்ளனர். நேற்று காலை வழக்கம்போல், கடையை திறக்க வந்த கடைகளின் உரிமையாளர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ழநபர்களை தேடி வருகின்றனர்.