எய்ட்ஸ் தடுப்பு கலைக்குழுவினரின் விழிப்புணர்வு பேரணி
திருச்சி, நவ.23 திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்து மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் எச்.ஐ.வி எய்ட்ஸ் தடுப்பு கலைக்குழுவினரின் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் லட்சுமி, எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் திட்ட மேலாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.