எசனை கோரை ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
திருச்சி, ஆக. 30 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனை கோரை ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது .
இம்முகாமை எசனை கோரை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி நாராயணசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் செல்வ விநாயகம் தலைமையேற்று சுகாதார மேற்பார்வையாளர் ரா.மதிவாணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசன் லட்சுமணன், பள்ளி தலைமை ஆசிரியர் திருமாவளவன் ஊராட்சி செயலர் முருகானந்தம் மற்றும் சுகாதார செவிலியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.