தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் ரத்ததான முகாம்
திருச்சி, ஜுன் 30 முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சி மண்டலம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் இன்று திருச்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது, இதில் ஏராளமான தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் ரத்ததானம்வழங்கினர்