அங்காளம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம்
முசிறி அங்காளம்மன் கோவிலில் வளையல் காப்பு அலங்காரம். – திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
முசிறி அங்காளம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும்,
அங்காளம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.நிகழ்ச்சியை முன்னிட்டு அங்காளம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்ட அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அங்காளம்மன் வளையல் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அப்போது உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
பக்தர்களுக்கு
அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.
திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.