அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் அனுசரிப்பு
திருச்சி, ஆக. 28 ககழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் நண்பரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழி 25ஆம் ஆண்டு நினைவு நாளில், திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட செயலாளர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அன்பில் பொய்யாமொழி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, திருச்சி மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், மாவட்ட கழக நிர்வாகிகள் சேகரன், சபியுல்லா, செந்தில், பகுதி செயலாளர் மோகன், ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.